×

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

 

சத்தியமங்கலம், மார்ச் 15: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தாளவாடி மேற்கு ஒன்றியம் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் தாளவாடி மேற்கு சிவண்ணா, தாளவாடி கிழக்கு நாகராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.  இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தர கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழு முனைப்புடன் உழைக்க வேண்டும் என பேசிய நீலகிரி எம்பி ஆ.ராசா தேர்தல் பணியாற்றுவது குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தூர், ஒன்றிய துணைச் செயலாளர் பிரகாஷ், தாளவாடி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sathyamangalam ,Thalawadi West ,Thalawadi ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை